SDPI South Chennai President's message to all the Indians



The Social Democratic Party of India (SDPI) is a neo-political movement aiming at the renaissance of Indian politics to empower people of all social strata within the country. Let we all Indian citizens join hands in a common political platform to promote equality, freedom, justice and a harmonised living.

SDPI has come out with the slogan - "Freedom from hunger! Freedom from Fear"

I welcome all Indians - especially the Chennaites in promoting a harmonised polity to work for the welfare and development of India and the citizens. Our vision of "India - a Superpower in 2020" should be achieved with the advancement and empowerement of all Indians regardless of any caste, creed or religion.

- P. Mohamed Hussain
President, South Chennai District,
SDPI.

Sunday, March 13, 2011

தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை கண்டித்து சென்னையிலுள்ள இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்


அப்பாவி தமிழக மீனவர்களை கொல்வது இலங்கை கடற்படைக்கு வாடிக்கையான நிகழ்ச்சியாகிவிட்டது. தமிழ் எங்களது மூச்சு! தமிழன் எங்களது உயிர்! என்று பேசுபவர்களெல்லாம் ஏனோ தமிழக மீனவர்களின் உயிர்களை பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இடைச்செருகலாக, இதில் இந்தியர்களின் உயிர்களை பணயமாக்கி விளையாடும் பி.ஜே.பி. யின் தலைவர்(?) சுஷ்மா ஸ்வராஜ் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அப்பாவிகளின் நம்பிக்கையை பெறுவதற்கு நிவாரணம் தர தமிழகம் வந்து சென்றிருக்கிறார். மக்களின் நம்பிக்கையை பெறுவாரா என்பது வேறு விஷயம்.

ஆனால் சூழ்நிலை என்னவாக இருந்தபோதிலும் SDPI, இந்திய மக்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்பது திண்ணம். அரசியல் இலாப நோக்கங்களில்லாமல், மக்களின் நலனே தலையாயது என்ற அடிப்படையில் அப்பாவி தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படையைக் கண்டித்து சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பு 25.01.2011 அன்று SDPI மாபெரும் முற்றுகை போராட்டத்தை நடத்தியது. போராட்டத்திற்க்கு SDPI யின் தமிழக தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் மாவட்ட SDPI தலைவர் பிலால் அவர்களும், வடசென்னை மாவட்ட SDPI தலைவர் அமீர் ஹம்சா அவர்களும் போராட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் சிறப்புரையை தென்சென்னை மாவட்ட SDPI தலைவர் P. முஹம்மது ஹுசைன் நிகழ்த்தினார்.

முற்றுகை போராட்டத்தின் பங்காளர்களாக பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். பல்வேறு பத்திரிக்கைகளிலிருந்தும்  பத்திரிக்கையாளர்கள் வந்து கலந்துகொண்டனர். முற்றுகைப்போராட்டத்தின் முடிவில் போராட்டத்தில் பங்குபெற்ற அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

மற்றெந்த ஜனநாயகப் போராட்டத்தையும் போல இப்போராட்டத்தையும் பத்திரிக்கைகள் வெளியிட மறுத்தது. இதுதான் பத்திரிக்கைகள் கடைபிடிக்கும் ஜனநாயகமோ?

No comments:

Post a Comment